பைனாபிள் புலாவ் - Pineapple Pulao.

பைனாபிள் புலாவ் - Pineapple Pulao.
குழந்தைகளுக்கு விருப்பமான பைனாபிள் புலாவ்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு கலந்த சாதமாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று பைனாபிள் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்

 அன்னாசிப் பழத் துண்டுகள் (தோல் சீவி நறுக்கியது) - 1 கப்
அன்னாசி பழச்சாறு - அரை கப்
வெங்காயம் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் - தலா அரை டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 1
முந்திரி, பாதாம் - தலா 10
எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - முக்கால் கப்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பைனாப்பிள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் அரிசியைச் சேர்த்து நன்றாகப் புரட்டுங்கள்.

உப்பு, சர்க்கரை, அன்னாசிச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடுங்கள்.

இரண்டு விசில் வந்தவுடன் இறக்கிவிடுங்கள்.

விசில் போனவுடன் நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துப் போட்டுக் கிளறுங்கள்.

வெங்காயப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

பைனாபிள் புலாவ் ரெடி.

பாசுமதி அரிசி கீர் - Basmati Rice Kheer

பாசுமதி அரிசி கீர் - Basmati Rice Kheer
சூப்பரான பாசுமதி அரிசி கீர்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பல்வேறு வகையான கீர் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசுமதி அரிசியை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
பாசுமதி அரிசி - 2 கைப்பிடி
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
பாதாம் பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை :

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியைச் சேர்த்து மீதமான தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.

பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள்.

அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்குங்கள்.

சூப்பரான பாசுமதி அரிசி கீர் ரெடி.

நெத்திலி மீன் பொரியல் - Nethili Meen Poriyal

நெத்திலி மீன் பொரியல் - Nethili Meen Poriyal
அருமையான நெத்திலி மீன் பொரியல்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் - 1/2 கிலோ,
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 6,
பச்சைமிளகாய் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
உப்பு -  தேவைக்கு.

செய்முறை :

நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி. 

கேரளா மத்தி மீன் சாறு - Kerala Mathi Fish Saaru

கேரளா மத்தி மீன் சாறு - Kerala Mathi Fish Saaru
kerala-mathi-fish-saaru
சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 4,
தக்காளி - 4,
பச்சைமிளகாய் - 6,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
மத்தி மீன் - 1/2 கிலோ,
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது.

தாளிக்க...

கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.

செய்முறை :

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

பன்னீர் மிளகு வறுவல் - Paneer Pepper Fry

பன்னீர் மிளகு வறுவல் - Paneer Pepper Fry

பன்னீர் மிளகு வறுவல் செய்வது எப்படி?
paneer-pepper-fry.



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
paneer-pepper-fry.

தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட் பன்னீர் மிளகு வறுவல் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 250 கிராம்,
வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு,
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், க
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.

செய்முறை :

பன்னீரை சதுர துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து எடுக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது மசாலா வாசனை போனவுடன் மிளகு தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்.

பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதி வந்ததும் பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கறிவேப்பிலை சேர்த்து வறுவலாக வரும்வரை கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சூப்பரான பன்னீர் மிளகு வறுவல் ரெடி.

உருளைக்கிழங்கு சிப்ஸ் - Potato Chips

உருளைக்கிழங்கு சிப்ஸ் - Potato Chips
வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 150 கிராம்

செய்முறை :

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு :

உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

ராஜ்மா சப்ஜி - Rajma Sabji

 ராஜ்மா சப்ஜி - Rajma Sabji
rajma-sabji
சப்பாத்திக்கு அருமையான ராஜ்மா சப்ஜி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 100 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பட்டை - 2 துண்டு.

செய்முறை :

வெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.

வெண்டைக்காய் சூப் - Ladies Finger Soup

வெண்டைக்காய் சூப் - Ladies Finger Soup


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இன்று வெண்டைக்காயில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் - 7,
உப்பு - சிறிது,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.

அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,

செய்முறை

கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.

வெண்டைக்காய் சிப்ஸ் - Ladies Finger Chips

வெண்டைக்காய் சிப்ஸ் - Ladies Finger Chips


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.

தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 20,
கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.

சிறுகீரை கட்லெட் (Sirukeerai Cutlet.) செய்வது எப்படி?

சிறுகீரை கட்லெட் (Sirukeerai Cutlet.) செய்வது எப்படி?
sirukeerai-cutlet.

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் கீரை என்றால் சாப்பிட அடம் பிடிப்பார்கள். கீரையை இவ்வாறு கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிறுகீரை - அரை கட்டு
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - அரை அங்குலம் அளவு
உருளைக்கிழங்கு - 25 கிராம்
பிரெட் - 25 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன்
ரஸ்க் பவுடர் - 50 கிராம்
மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும்.

கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு, இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும்.

அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ண்ணெயைத் தடவி, கட்லெட்டை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சிறுகீரை கட்லெட் ரெடி.

இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை - Andhra-Chicken-Fry

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை
kodi-Vepudu--Andhra-Chicken-Fry


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை
kodi-Vepudu--Andhra-Chicken-Fry

ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை ஆந்திராவில் கோழி வெப்புடு என்று சொல்வார்கள். இது சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 40 மில்லி
இஞ்சி - பூண்டு விழுது - 15 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

தக்காளி, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் ததக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை ரெடி.

தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

பரங்கிக்காய் - சுக்கு சூப் - உடல் எடையை குறைக்கும்

 பரங்கிக்காய் - சுக்கு சூப் - உடல் எடையை குறைக்கும்
pumpkin-dry-ginger-soup



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.

தேவையான பொருட்கள் :

சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பரங்கிக்காய் - சிறிய துண்டு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.