கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி

கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
kerala-kadala-curry

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



கடலைக் கறியை சப்பாத்தி, புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம். இன்று கேரளா ஸ்பெஷல் கடலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சின்ன கொண்டைக்கடலை - 2 கப்
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -  2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
துருவிய தேங்காய் - முக்கால் கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 8 இலைகள்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

சின்ன கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அடுத்து இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும்.

இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும்.

இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்துத் தூவி இறக்கவும்.

சூப்பரான கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி ரெடி.

மட்டன் வடை

மட்டன் வடை
சூப்பரான ஸ்நாக்ஸ்
mutton-vadai

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
சோம்பு - 10 கிராம்
கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - 5 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி. 

கேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி?
kerala-special-kalan

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கேரளா விசேஷங்களில் செய்யப்படும் உணவுகளில் காளன் முக்கியமானது. நேந்திரங்காய் கொண்டு செய்யும் இந்த காளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நேந்திரங்காய் - 2
சேனைக்கிழங்கு - 250 கிராம்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
தயிர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு

அரைக்க:

துருவிய தேங்காய் - முக்கால் கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 5 இலைகள்

செய்முறை:

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

நேந்திரங்காய், சேனைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வெட்டிய காய்கறிகளை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்த காய்களை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.



அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பன்னீர் பக்கோடா

பன்னீர் பக்கோடா
Paneer-pakoda
மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 2 கப்
கடலை மாவு - 2 கப்
சாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கு
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு

செய்முறை :

பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம். 

கறிவேப்பிலை மிளகு குழம்பு

 கறிவேப்பிலை மிளகு குழம்பு
Curry-leaves-pepper-kulambu
காய்ச்சலில் இருந்து நிவாரணம் கறிவேப்பிலை மிளகு குழம்பு


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கறிவேப்பிலை மிளகு குழம்பு பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
மிளகு - 20,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

சூப்பரான கறிவேப்பிலை மிளகு குழம்பு ரெடி.

ஹைதராபாதி சிக்கன் மசாலா

ஹைதராபாதி சிக்கன் மசாலா
Hyderabadi-chicken-masala
சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
காய்ந்த மிளகாய் - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தனியா (மல்லி) - 2 டீஸ்பூன்
பட்டை - 2
முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஜாதிக்காய் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ பியூரி - 200 மில்லி
உப்பு - தேவையான அலவு
தேங்காய்ப்பால் - 200 மில்லி

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.

அடுத்து அதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும்.

சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும்.

தேங்காய் பால் சொதி

தேங்காய் பால் சொதி
coconut-milk-sodhi
இடியாப்பத்திற்கு அருமையான தேங்காய் பால் சொதி


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கேரட் - 150 கிராம்,
பீன்ஸ் - 75 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு,
வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - தேவையான அளவு,
பட்டை, கிராம்பு கசகசா,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.

பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.

அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.

சூப்பரான சொதி ரெடி!

மீன் முட்டை பொரியல்

மீன் முட்டை பொரியல்
Fish-Egg-Poriyal
சூப்பரான மீன் முட்டை பொரியல்


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மீனில் குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீன் முட்டையில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதன் சுவை அருமையாக இருக்கும்

தேவையான பொருட்கள்

மீன் முட்டை - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு

செய்முறை

சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.

அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.

பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.

கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.

நெல்லிக்காய் சூப் - வயிற்று கோளாறை குணமாக்கும்

 நெல்லிக்காய் சூப் - வயிற்று கோளாறை குணமாக்கும்
Nellikai-Soup

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நெல்லிக்காய் வயிற்றுக் கோளாறு, வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இன்று நெல்லிக்காய் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 1
நெல்லிக்காய் 3
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை  :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நெல்லிக்காயை வேகவைத்து கொள்ளவும். வேக வைத்த நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை தனியாக வைக்கவும். நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் சோள மாவை சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதில் நெல்லிக்காய், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

வெங்காயத்தாள் பருப்பு பொரியல்

வெங்காயத்தாள் பருப்பு பொரியல்
spring-onion-poriyal


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வெங்காயத்தாளை பிரைடு ரைஸ், மஞ்சூரியனில் மட்டுமே அதிகளவு பயன்படுத்துவார்கள். இன்று வெங்காயத்தாள் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் - ஒரு கட்டு
வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை :

வெங்காயம், வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் கடலைப்பருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுலபமாக விரைவில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.

நூடுல்ஸ் கட்லெட் (Noodles-cutlet).

நூடுல்ஸ் கட்லெட் (Noodles-cutlet).
குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் கட்லெட்


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை வைத்து சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மேகி நூடுல்ஸ் - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1 கட்டு
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது துண்டு,
பச்சைமிளகாய் - 2,
செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 3 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

நூடுல்ஸில் கால் பங்கை நன்றாக நொறுக்கி வைக்கவும்.

மீதமுள்ள முக்கால் பாகம் நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.

மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கேரட், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி, மேகி நூடுல்ஸ் மசாலா, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

நொறுக்கிய நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும்.

கலந்த கலவையை விருப்பமான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி நொறுக்கி வைத்துள்ள நூடுல்ஸில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.

தயிர் சேமியா

தயிர் சேமியா
curd-semiya
அருமையான மதிய உணவு தயிர் சேமியா


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


சேமியா சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு பழங்கள் போட்டு தயிர் சேமியா செய்து கொத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சேமியா - 200 கிராம்
தயிர் - ஒரு கப்,
மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க :

மிளகு - 10,
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2

செய்முறை :

சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.

பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான தயிர் சேமியா ரெடி.

நெல்லூர் சிக்கன் வறுவல்

நெல்லூர் சிக்கன் வறுவல்
Nellore-chicken-fry
அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).

மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.

அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.

கோவைக்காய் சிப்ஸ்

கோவைக்காய் சிப்ஸ்
சாம்பார் சாதத்திற்கு அருமையான கோவைக்காய் சிப்ஸ்
kovakkai-chips


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கோவைக்காய் சிப்ஸ் அருமையாக இருக்கும். இன்று இந்த சிப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோவைக்காய் - கால் கிலோ,
ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம்,
எண்ணெய் - 200 கிராம்.

செய்முறை:

கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும்.

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான கோவைக்காய் சிப்ஸ் ரெடி.



குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
aravana-payasam


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
வெல்லம் - 1 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 250 மில்லி
ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.

சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை
andhra-style-puliyogare

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்
புளி, உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - அரை ஸ்பூன்.

செய்முறை :

சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.

கொத்து தோசை

கொத்து தோசை
மாலை நேர டிபன் கொத்து தோசை
kothu-dosa


                தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க.  கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கரண்டி
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பாதியளவு வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்

கடைசியாக மிளகு - சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.

சூப்பரான கொத்து தோசை ரெடி.

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு
prawn-kuzhambu-added Cocunut


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் -  தேவையான அளவு
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.



சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

ஃபிங்கர் சிக்கன்(finger-chicken)

ஃபிங்கர் சிக்கன்(finger-chicken)


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஃபிங்கர் சிக்கனை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ஃபிங்கர் சிக்கனை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1
தயிர்  - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!!

இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு

தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு
chicken-coconut-milk-pepper-curry


      

சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுதூள் - 4 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி

முருங்கை கீரை கடலை உசிலி

முருங்கை கீரை கடலை உசிலி
Murungai-Keerai-Paruppu

Murungai-Keerai-Paruppu

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இரத்தசோகையை குணமாக்கும் முருங்கை கீரை கடலை உசிலி

இரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று முருங்கை கீரை கடலை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும்.

வேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.



தண்ணீர் வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்க முருங்கை கீரை கடலை உசிலி ரெடி.